search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    தடுப்பூசி (கோப்புப்படம்)

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 68 மையங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்படி நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் 68 மையங்களில் நடைபெறுகிறது.
    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்படி நாளை (23-ந்தேதி) மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் 68 மையங்களில் நடைபெறுகிறது. இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் சமுதாய நலகூடம், ஊராட்சி சேவைமைய கட்டிடம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறும்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×