என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடவள்ளி அருகே தாய் 2-வது திருமணத்தால் பள்ளி மாணவி தற்கொலை
Byமாலை மலர்22 Oct 2021 11:07 AM GMT (Updated: 22 Oct 2021 11:07 AM GMT)
கோவை வடவள்ளி அருகே தாய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி கனகவள்ளி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 13). இவர் கணுவாயில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இவரது தாய் முதல் கணவரை பிரிந்து 2-வதாக அந்தோணி சாமுவேல் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இது பிரியதர்ஷினிக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று தாய், மகள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கனகவள்ளி நான் எங்கேயாவது செல்கிறேன் என கூறி விட்டு மகளிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.
தாய் கோபித்துக் கொண்டு வெளியே சென்றதால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவரது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் நான் போகிறேன், நான் போகிறேன் என அடிக்கடி கூறுகிறாய், நீ போக வேண்டாம், நானே செல்கிறேன் என அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார். அந்த கடிதத்தை வடவள்ளி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை வடவள்ளி அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி கனகவள்ளி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 13). இவர் கணுவாயில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இவரது தாய் முதல் கணவரை பிரிந்து 2-வதாக அந்தோணி சாமுவேல் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இது பிரியதர்ஷினிக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று தாய், மகள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கனகவள்ளி நான் எங்கேயாவது செல்கிறேன் என கூறி விட்டு மகளிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.
தாய் கோபித்துக் கொண்டு வெளியே சென்றதால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவரது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் நான் போகிறேன், நான் போகிறேன் என அடிக்கடி கூறுகிறாய், நீ போக வேண்டாம், நானே செல்கிறேன் என அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார். அந்த கடிதத்தை வடவள்ளி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X