என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே வீட்டை விற்க மறுத்த மனைவியை வெட்டிய கணவர் கைது
Byமாலை மலர்22 Oct 2021 11:05 AM GMT (Updated: 22 Oct 2021 11:05 AM GMT)
திருவள்ளூர் அருகே வீட்டை விற்க மறுத்த மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). இவர் தபால் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் விஜயகுமார் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்று விடலாம் என்று தன்னுடைய மனைவி கலையரசி (59) யிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் வீட்டை விற்க மறுப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை தகாத வார்த்தையால் பேசி காய்கறி வெட்டும் கத்தியால் அவரது இடது கை மற்றும் தாடையில் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X