என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிக்கூடத்தில் ரூ.2 லட்சம் திருட்டு
Byமாலை மலர்22 Oct 2021 10:52 AM GMT (Updated: 22 Oct 2021 10:52 AM GMT)
பள்ளிக்கூடத்தில் ரூ.2 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றம் பைபாஸ் சாலை அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியும் உள்ளது. யாரோ மர்மநபர்கள், கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் புழல் லட்சுமிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி(வயது 62). இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X