search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மயிலம் பகுதியில் தொடர் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

    மயிலம் பகுதியில் தொடர் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மயிலம்:

    மயிலம் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி நடந்தது. இது தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரான திருப்பத்தூர் மாவட்டம் சின்னகல்லுபள்ளியை சேர்ந்த சுதாகர்(வயது 43) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் மயிலத்தில் பதுங்கி இருந்த சுதாகரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×