என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2014 முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.3.78 கோடி சொத்து குவித்ததாக இளங்கோவன்-மகன் மீது வழக்கு
Byமாலை மலர்22 Oct 2021 10:05 AM GMT (Updated: 22 Oct 2021 10:05 AM GMT)
இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருப்பவர் ஆர். இளங்கோவன். இவரது மகன் பிரவீன்குமார். இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் கல்வி நிறுவனங்களின் துணை தலைவராக உள்ளார்.
இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது கடந்த 2014 ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 3.78 கோடி வரை சொத்து குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
சமீப காலமாக கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கூட்டுறவு வங்கி தலைவரான இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளராக இருந்த நிலையில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருப்பவர் ஆர். இளங்கோவன். இவரது மகன் பிரவீன்குமார். இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் கல்வி நிறுவனங்களின் துணை தலைவராக உள்ளார்.
இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது கடந்த 2014 ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 3.78 கோடி வரை சொத்து குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
சமீப காலமாக கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கூட்டுறவு வங்கி தலைவரான இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளராக இருந்த நிலையில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X