search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நச்சலூர்:

    குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சேப்ளாப்பட்டி காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 62), நெய்தலூர் காலனி பகுதியை சேர்ந்த சிங்காரம் (69), நெய்தலூர் அண்ணாநகர் இளங்கோ (49) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
    Next Story
    ×