என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது
Byமாலை மலர்22 Oct 2021 9:49 AM GMT (Updated: 22 Oct 2021 9:49 AM GMT)
குளச்சல் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டி.வி. ஆபரேட்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானர். அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சிறுமியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் குளச்சல் துறைமுகம் பகுதியில் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஆன்டனி என்பவர் மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு குளச்சல் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆன்டனியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரணியல் சிறையில் அடைத்தனர்.
குளச்சல் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானர். அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சிறுமியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் குளச்சல் துறைமுகம் பகுதியில் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஆன்டனி என்பவர் மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு குளச்சல் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆன்டனியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரணியல் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X