என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு
Byமாலை மலர்22 Oct 2021 9:30 AM GMT (Updated: 22 Oct 2021 9:30 AM GMT)
இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும், அதன் நகல்களையும் கலந்தாய்வின்போது மாணவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் முதுநிலை பட் டப்படிப்பு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி நடந்தது.
முதுநிலைப்பட்ட வகுப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், பன்னாட்டு வணிகவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் ஆகிய துறைகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக இருந்தது.
அதற்கான இறுதிகட்ட கலந்தாய்வு இன்று கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும், அதன் நகல்களையும் கலந்தாய்வின்போது மாணவர்கள் கொண்டு வந்திருந்தனர். முதல் இரண்டு கலந்தாய்வில் பங்கு பெறாதவர்களும், பங்கு பெற்று இடம் கிடைக்காதவர்களும் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X