search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சிவகாசியில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி

    பட்டாசு வாங்கிவிட்டு சிவகாசியில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஷியாம் (வயது 45). இவர் தனது நண்பர் ராஜேசுடன் (35) சிவகாசியில் பட்டாசு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    நேற்று காலை சிவகாசிக்கு வந்த அவர்கள், அங்கு பட்டாசுகளை வாங்கிக் கொண்டு இரவு இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி புறப்பட்டனர்.

    இரவு 11 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கருங்காலக்குடி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ஷியாம் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் ராஜேஷ் லேசான காயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு ராஜா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×