search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.
    X
    வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.

    திருப்பூரில் பட்டப்பகலில் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் - பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் ஏராளமானோர் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அரிசி கடை வீதியில் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் ஏராளமானோர் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் பட்ட பகலில் அரிசி கடை வீதி சாலைகளில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்கள் 2 பேர் அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட்டிலை கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் . 

    இதை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மது போதையில் இருந்த நபர்களை கட்டிவைத்து அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மது போதையில் இருந்தவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    அரிசி கடை வீதியில் இதுபோல் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
    Next Story
    ×