என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்22 Oct 2021 5:20 AM GMT (Updated: 22 Oct 2021 5:20 AM GMT)
ஒகேனக்கல்லில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து நேற்று மாலை வரை விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட மலைப் பகுதியைச் சார்ந்த இடங்களில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து நேற்று மாலை வரை விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட மலைப் பகுதியைச் சார்ந்த இடங்களில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X