என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது
Byமாலை மலர்21 Oct 2021 7:59 AM GMT (Updated: 21 Oct 2021 7:59 AM GMT)
பல்லடம் வட்டாரத்திலுள்ள சிறு, குறு விவசாயி சான்று மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் பெற சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் சிறு,குறு, விவசாயிகள் சான்று வழங்கும் சிறப்பு முகாம் நாளை 22-ந்தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனாபேகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லடம் வட்டாரத்திலுள்ள சிறு, குறு விவசாயி சான்று மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் பெற சிறப்பு முகாம் வருகிற 22-ந்தேதி சுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நிலத்தின் பத்திர நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் சிறு, குறு, விவசாயி சான்றுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X