search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ரவி.
    X
    கைதான ரவி.

    உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    திருமண ஆசைகாட்டி ரவி, சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தேவனூர்புதூர் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 22). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

    இதில் திருமண ஆசைகாட்டி ரவி, சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்தார். 
    Next Story
    ×