search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள மருதூர் விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர், தனது நண்பரின் தந்தையான கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு மேட்டுமருதூர் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். தோட்டத்துக்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×