என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்20 Oct 2021 7:56 PM GMT (Updated: 20 Oct 2021 7:56 PM GMT)
கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்கவில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 40 முகாம்கள், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 50 முகாம்கள், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 50 முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளன.
முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மற்றும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு 84 நாட்கள் ஆன பொதுமக்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், லாரி டிரைவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்கவில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X