என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்வெட்டு திறப்பு விவகாரம்- சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் ஜெயக்குமார் புகார்
Byமாலை மலர்20 Oct 2021 5:31 PM GMT (Updated: 20 Oct 2021 5:31 PM GMT)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் கல்வெட்டு திறப்பது சட்டத்திற்குட்பட்ட செயல் அல்ல என ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இது தொடர்பான கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில், கொடியேற்றியவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றி வைத்து கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்று பொறிக்கப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் கல்வெட்டு திறப்பது சட்டத்திற்குட்பட்ட செயல் அல்ல. சசிகலா மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு தி.மு.க. உதவி செய்கிறது. குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க. பெயரை சசிகலா பயன்படுத்தி வருகிறார். சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X