search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொற்கலை - ரங்கநாதன்
    X
    பொற்கலை - ரங்கநாதன்

    4 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆள் இல்லை: வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை

    4 பிள்ளைகள் இருந்தும் கவனிக்காததால் வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபுசமுத்திரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 82). விவசாயி. இவரது மனைவி பொற்கலை (75). இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ரங்கநாதனும், பொற்கலையும் தனியாக வசித்து வந்தனர். 4 பிள்ளைகள் இருந்து யாரும் கவனிக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள், தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் வீட்டில் பூச்சி மருந்தை குடித்தனர். இதில் மயங்கி விழுந்த 2 பேரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    நேற்று காலை இவர்களது வீடு நீண்டநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரங்கநாதனும், பொற்கலையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 4 பிள்ளைகள் இருந்தும் யாரும் கவனிக்காததால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×