search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்த காட்சி.
    X
    சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்த காட்சி.

    குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம்

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    திருப்பூர்:

    திருப்பூரில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நநிலையில் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

    இந்த வாகனம் ஒவ்வொரு நாளாக திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கு சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத் துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×