என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம்
Byமாலை மலர்20 Oct 2021 10:28 AM GMT (Updated: 20 Oct 2021 10:28 AM GMT)
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர்:
திருப்பூரில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நநிலையில் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த வாகனம் ஒவ்வொரு நாளாக திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கு சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத் துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X