என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகள் - வாகன ஓட்டிகள் அவதி
Byமாலை மலர்20 Oct 2021 10:18 AM GMT (Updated: 20 Oct 2021 10:18 AM GMT)
உடுமலை நகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ரோடுகளில் ஏற்கனவே செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகள் சேதமடைந்து வருகின்றன. உடுமலை நகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ரோடுகளில் ஏற்கனவே செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இச்சாலைகளில் மழைநீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது மழையின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காத ரோடுகளில் ஆங்காங்கே பெரும் குழிகள் ஏற்படுகிறது.
குழிகளில் வாகனங்கள் இறங்கி, ஏறும் போது நாளடைவில் பெரிய பள்ளமாக மாறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது இவ்வாறான அவலநிலை உருவாகிறது. இதனை உடனே சரி செய்தால் மட்டுமே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X