search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    4 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    3 பெண்களை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லாத நிலையில், 4-வதாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியும் இறந்து போனதால், தனிமையில் தவித்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    வாழப்பாடி:

    சேலம் அருகே முத்தம்பட்டி சென்னாக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஆடு வளர்க்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி (வயது 66). இவர் இளம் வயதில் தொடர்ந்து 3 பெண்களை திருமணம் செய்தார். பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் சுப்பிரமணியை விட்டு பிரிந்து சென்றனர்.

    3 மனைவிகளும் தன்னுடன் இல்லாததால், 4-வதாக பழனியம்மாள் (60) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவர் மட்டுமே வசித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி, தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வாழப்பாடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே, 3 பெண்களை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லாத நிலையில், 4-வதாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியும் இறந்து போனதால், தனிமையில் தவித்து வந்த சுப்பிரமணி, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×