என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்20 Oct 2021 7:42 AM GMT (Updated: 20 Oct 2021 7:42 AM GMT)
3 பெண்களை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லாத நிலையில், 4-வதாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியும் இறந்து போனதால், தனிமையில் தவித்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாழப்பாடி:
சேலம் அருகே முத்தம்பட்டி சென்னாக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஆடு வளர்க்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி (வயது 66). இவர் இளம் வயதில் தொடர்ந்து 3 பெண்களை திருமணம் செய்தார். பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் சுப்பிரமணியை விட்டு பிரிந்து சென்றனர்.
3 மனைவிகளும் தன்னுடன் இல்லாததால், 4-வதாக பழனியம்மாள் (60) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவர் மட்டுமே வசித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி, தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வாழப்பாடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே, 3 பெண்களை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லாத நிலையில், 4-வதாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியும் இறந்து போனதால், தனிமையில் தவித்து வந்த சுப்பிரமணி, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சேலம் அருகே முத்தம்பட்டி சென்னாக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஆடு வளர்க்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி (வயது 66). இவர் இளம் வயதில் தொடர்ந்து 3 பெண்களை திருமணம் செய்தார். பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் சுப்பிரமணியை விட்டு பிரிந்து சென்றனர்.
3 மனைவிகளும் தன்னுடன் இல்லாததால், 4-வதாக பழனியம்மாள் (60) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவர் மட்டுமே வசித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி, தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வாழப்பாடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே, 3 பெண்களை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லாத நிலையில், 4-வதாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியும் இறந்து போனதால், தனிமையில் தவித்து வந்த சுப்பிரமணி, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X