என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்19 Oct 2021 8:12 PM GMT (Updated: 19 Oct 2021 8:12 PM GMT)
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது 59) என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று தொப்பூர் போலீசார் உம்மியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த காவேரியம்மாள் (50) மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் நல்லம்பள்ளி அருகே பூசாரிகொட்டாய் கிராமத்தில் மதுவிற்ற நரசிம்மன் (56) மற்றும் வடிவேல் (45) ஆகிய 2 பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X