search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஒரத்தநாடு அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து மாணவன் பலி

    ஒரத்தநாடு அருகே மீன் குட்டையில் தவறி விழுந்த மாணவன் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகேயுள்ள மேலஉளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தீபக் (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தீபக் அதே பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்தார். பின்னர் அங்குள்ள மீன் வளர்ப்பு குளத்தில் கை, கால்களை கழுவதற்காக உள்ளே இறங்க முயன்றார். அப்போது மீன் குட்டையில் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி மாணவர் தீபக் இறந்தார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் தீபக்கின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×