search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தூத்துக்குடியில் மின்கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை

    தூத்துக்குடியில் இன்று காலை மின்கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் காட்டுப்பகுதியில் உயர்மின்கோபுரம் உள்ளது. இன்று காலை இந்த கோபுரத்தில் வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை செய்துள்ளார். அவரது உடல் கருகிய நிலையில் கோபுரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. அந்த வழியாக காட்டு வேலைக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இது குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து கருகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×