search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

    காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சூரியகுமார் (வயது 22). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்தநிலையில் சூரிய குமார் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இதனை தெரிவித்தபோது அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. இது சூரியகுமாருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

    அவர் கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார்.

    அப்போது நண்பர்கள், “உன்னை அவள் காதலிக்கவில்லை என்று சொல்லி விட்டாள். எனவே நீ அவளை மறந்து விடு” என்று அறிவுரை கூறியுள்ளனர். இருந்த போதிலும் சூரியகுமாரால் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக சரவணன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி வழக்குப்பதிவு செய்து சூரியகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×