search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாறுமாறாக ஓடிய கார் புதருக்குள் பாய்ந்து நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    தாறுமாறாக ஓடிய கார் புதருக்குள் பாய்ந்து நிற்பதை படத்தில் காணலாம்.

    மங்கலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை - மகள்கள் காயம்

    தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த புதருக்குள் பாய்ந்து நின்றது.
    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி புக்கிளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 30). இவர் மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மைபணியாளராக பணியாற்றி வருகிறார். நாகராஜ் இன்று காலை காரில் மங்கலத்தை அடுத்த கிடாதுறை பகுதியில் இருந்து நடுவேலம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கிடாதுறை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது நாகராஜின் கார் தாறுமாறாக ஓடி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மங்கலத்தை அடுத்த நடுவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30) என்பவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த விஸ்வநாதன் மகள்கள் ஹர்சினி, ஹர்சிதா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். 

    பின்னர் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த புதருக்குள் பாய்ந்து நின்றது. இது பற்றிய தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்கலம் போலீசார் காயமடைந்த விஸ்வநாதன் மற்றும் அவரது மகள்களை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து நாகராஜிடம் மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×