search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    பல்லடத்தில் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டம்

    வருகிற 27- ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் தொடங்குவதற்கான திருப்பூர் மாவட்ட அமைப்பு கூட்டம் நடைபெற்றது.  

    கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை திருப்பூர் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இணைச்செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். 

    அமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்க அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினார். 

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளராக சுரேஷ், மாவட்ட நிதி காப்பாளராக சதீஷ்குமார் மற்றும் 11 பேர் துணை அமைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

    இதில் வருகிற 27 - ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
    Next Story
    ×