என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணி அருகே மினி லாரியில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தல்- வாலிபர் கைது
Byமாலை மலர்18 Oct 2021 11:36 PM GMT (Updated: 18 Oct 2021 11:36 PM GMT)
திருத்தணி அருகே மினி லாரியில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமஞ்சேரி என்ற பகுதியிலிருந்து நேற்று காலை மினி லாரி வந்தது.
அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் அந்த மின்வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், சுமார் 1,400 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி 50 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த தினேஷ் (வயது 27) என்பவரை கைது செய்தனர். இவர் திருவள்ளூர் உள்பட அப்பகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசியை பெற்று ரகசியமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கனகம்மாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X