search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செட்டிப்பாளையத்தில் ஆட்டை கடித்த நாயை வி‌ஷம் வைத்து கொன்ற தொழிலாளி கைது

    செட்டிப்பாளையத்தில் ஆட்டை கடித்த நாயை வி‌ஷம் வைத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 45). டிரைவர். இவர் அவரது தெருவில் உள்ள 15 நாட்டு நாய்களை பராமரித்து அதற்கு உணவு அளித்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முகமது உகாசா. இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பிரான்சிஸ் வளர்த்து வரும் நாய்களில் ஒரு நாய் முகமது உகாசாவின் ஆடு ஒன்றை கடித்துள்ளது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது உகாசா தனது ஆட்டை கடித்த நாய்க்கு உணவில் வி‌ஷம் வைத்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட நாய் சிறிது நேரத்தில் இறந்து போனது.

    இதை அறிந்த நாயை வளர்த்த பிரான்சிஸ், இது குறித்து முகமது உகாசா மீது செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முகமது உகாசாவை கைது செய் தனர்.

    Next Story
    ×