என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகலை ஆசிரியர் தேர்வு: வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை- அமைச்சர் அன்பில் மகேஷ்
Byமாலை மலர்18 Oct 2021 1:42 PM GMT (Updated: 18 Oct 2021 1:42 PM GMT)
மழலையர்கள் வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 முதல் 10-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படும் அபாயம் உள்ளதாக கருதப்படுவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வருகிற 1-ந்தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘‘மழலையர்கள் வகுப்புகளை திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X