search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    காங்கயம் அருகே ரேக்ளா பந்தயம்

    வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
    காங்கயம்:

    காங்கயம் தாலுகா, ஊதியூரை அடுத்துள்ள எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. 

    இதில் 200 மீட்டர், 300 மீட்டர் ஆகிய பிரிவுகளில் 200 - க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன. போட்டியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் காங்கயம், குண்டடம், தாராபுரம், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 - க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. 

    வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.  
    Next Story
    ×