என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெருவில் தேங்கி நின்ற கழிவு நீரில் இறங்கி ஆய்வு செய்த செல்வராஜ் எம்.எல்.ஏ.
Byமாலை மலர்18 Oct 2021 9:24 AM GMT (Updated: 18 Oct 2021 9:24 AM GMT)
வேட்டியை மடித்துக்கட்டி கழிவுநீர் தேங்கிய வீதியில் நடந்து சென்று எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளிரோடு மண்ணரை தேவேந்திர வீதியில் மழைநீர் ரோட்டில் தேங்கியதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். கழிவுநீர் செல்வதற்கு போதுமான வடிகால் வசதி இல்லாததால் வீதியில் நடமாட முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இந்தநிலையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அப்பகுதிக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சென்றார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.விடம் முறையிடவே, உடனடியாக அந்தபகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வேட்டியை மடித்துக்கட்டி கழிவுநீர் தேங்கிய வீதியில் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து வீதியில் தேங்கிய மழை நீரைஅகற்றினார்கள்.
மேலும் சகதியாக காட்சியளித்த வீதியில் மண்கொட்டி சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகி திலகராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X