என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும் - உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்
Byமாலை மலர்18 Oct 2021 6:55 AM GMT (Updated: 18 Oct 2021 6:55 AM GMT)
பாரம்பரிய உணவுகளான கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
திருப்பூர்:
உலக உணவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு - 2 சார்பாக ‘உணவின் முக்கியத்துவம்‘ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கு நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பங்கேற்று பாரம்பரிய உணவு முறை பற்றியும் உணவு பழக்க வழக்கங்களை பற்றியும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நம் பாரம்பரிய உணவுகளான கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். அவற்றை உண்பதால் நாம் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ முடியும். சிறுவயதில் உடல் பருமன் உருவாக காரணம் நம் உணவு பழக்கவழக்கம் தான்.
உணவு பழக்கம் நன்றாக இருந்தால் உடலில் எதிர்ப்பு சக்திகள் உருவாகும். அதனால் நோய் இல்லா வாழ்க்கையை வாழமுடியும். பெற்றோர்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பாரம்பரிய உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரை, மருந்துகளை தேடி அலையாமல் நல்வாழ்க்கை வாழ முடியும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X