search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பதிவு பெற்ற நிறுவனங்களில் முதலீடு, சேமிப்பு - நீதிபதி அறிவுறுத்தல்

    திருப்பூரை பொறுத்தவரை தொழில், வேலை வாய்ப்பு, வர்த்தகம் என பல வகையிலும் பல தரப்பினர் நல்ல முறையில் வருவாய் ஈட்டுகின்றனர்.
    திருப்பூர்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

    திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருப்பூர் விரைவு கோர்ட் நீதிபதி ராமநாதன் தலைமை வகித்து பேசியதாவது: 

    திருப்பூரை பொறுத்தவரை தொழில், வேலைவாய்ப்பு, வர்த்தகம் என பல வகையிலும் பல தரப்பினர் நல்ல முறையில் வருவாய் ஈட்டுகின்றனர். தொழில் துறையினரோ, தொழிலாளர்களோ தாங்கள் முறையாக பெரும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பது மிக அவசியம்.

    இதுகுறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம். சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக அணுகும் நிதி நிறுவனங்கள், முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். உரிய வரவு செலவு கணக்கு தாக்கல் செய்து அரசு வழிகாட்டுதல் படி செயல்படும் நிறுவனங்களா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும், பாதுகாப்பும் உறுதியாகும். அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்கள், தனி நபர்களிடம் முதலீடு செய்வது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாகும். இது குறித்து உரிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். நீதித்துறை இதுபோன்ற விழிப்புணர்வுக்காக மக்கள் மத்தியில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது என்றார்.
    Next Story
    ×