search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

    தர்மபுரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சி.டி.பெட்டம் பகுதியை சேர்ந்த அருள் (வயது (25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அருகில் உள்ள அமானி மல்லாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கணபதி நகர் அருகே சென்றபோது எதிரில் வந்தமோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விருகின்றனர்.
    Next Story
    ×