என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சப்பள்ளியில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்17 Oct 2021 11:56 AM GMT (Updated: 17 Oct 2021 11:56 AM GMT)
பஞ்சப்பள்ளியில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் சித்தன். இவருடைய மனைவி கரியம்மாள் (வயது80). இவர் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் பூக்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பது போல் தோட்டத்திற்குள் வந்த ஒரு வாலிபர் திடீரென கரியம்மாளை தாக்கி கீழே தள்ளி அவரது முகத்தை துணியால் சுற்றி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின்பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X