என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் வாலிபர்கள் கைது
Byமாலை மலர்17 Oct 2021 8:57 AM GMT
அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
திருப்பூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் சந்தை புதுத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் மணிகண்டன் (28). இவர் பெருமாநல்லூர்அருகே உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்அளித்த புகாரின்பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகர்காலனியைச் சேர்ந்தவர் எம்.பாண்டி (28). அவரது தம்பி ஜீவா (27). இருவரும் திருப்பூர்மாவட்டம் தொரவலூர் பகுதியில் தங்கி வெங்காயம், தேன் வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில், சகோதரர்கள் பொம்ம நாயக்கன்பாளையத்துக்கு தேன் வியாபாரத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டி, ஜீவா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X