search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் மீது மரம் முறிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    பஸ் மீது மரம் முறிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    மங்கலம் அருகே பஸ் மீது முறிந்து விழுந்த மரம் - பயணிகள் உயிர் தப்பினர்

    மரம் முறிந்து விழுந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
    மங்கலம்:

    திருப்பூர் சோமனூர் பகுதியில் இருந்து மங்கலம் வழியாக திருப்பூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. 

    அதில் 25 பயணிகள் இருந்தனர். சுல்தான்பேட்டை அருகே சித்தி விநாயகர்கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் இடதுபுறமாக இருந்த மரம் முறிந்து பஸ் டிரைவரின் இருக்கைக்கு மேற்பகுதியில் விழுந்தது. 

    மரம் முறிந்து விழுந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் பஸ்சின்  பக்கவாட்டு கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தது. பஸ்சில் பயணம் செய்த  பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
    Next Story
    ×