என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரிய விலை கிடைக்காததால் பப்பாளி சாகுபடி விவசாயிகள் கவலை
Byமாலை மலர்17 Oct 2021 8:14 AM GMT (Updated: 17 Oct 2021 8:14 AM GMT)
பப்பாளிபழங்கள் கடந்த சில மாதங்களாக விலை சரிந்து காணப்படுகிறது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் பகுதியில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ரெட்லேடி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்டது என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்துவந்தனர். தற்போது விலை சரிவு காரணமாக பப்பாளிபழங்கள் மரங்களிலே அழுகும் நிலை உள்ளது. இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது:-
பப்பாளிபழங்கள் கடந்த சில மாதங்களாக விலை சரிந்து காணப்படுகிறது. இதனால் பப்பாளி காய்களில் இருந்து பால் எடுத்து ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்தோம். பப்பாளிபழங்கள் தற்போது விலை சரிந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.4க்கு மட்டுமே விற்பனையாகிறது.
வியாபாரிகளை பலமுறை அழைத்தும் பப்பாளிபழங்களை அறுவடை செய்ய வருவதில்லை. இதனால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் உரியவிலை கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். பப்பாளி பழங்கள் மரங்களிலேயே அழுகும் நிலை உள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X