என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பூரில் முதியவர் தலையில் கல்லைப்போட்டு கொலை - சைக்கோ வாலிபர் கைது
Byமாலை மலர்17 Oct 2021 3:10 AM GMT (Updated: 17 Oct 2021 3:10 AM GMT)
பெரம்பூரில் மாநகராட்சி கட்டண கழிப்பிடம் அருகே முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சைக்கோ வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர்:
பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலை கண்ணபிரான் கோவில் தெரு அருகே உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிட பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, தலை நசுங்கிய நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து முதியவர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இறந்த கிடந்த முதியவர் மூர்த்தி (வயது 65) என்பதும், இவர் அங்குள்ள பிளாட்பாரத்தில் தங்கியிருந்து மாநகராட்சி பொதுகழிப்பிடத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவருடன் தங்கியிருந்த ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ஹேமந்த் (29) என்பவர் முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஹேமந்த்தை செம்பியம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோ நோயாளி என்பதும், போரூரில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் தங்கியிருந்த அவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கிருந்து தப்பி வெளியே வந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோ வாலிபர் ஹேமந்த் வேறெங்கும் இது போல் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X