search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
    X
    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் நிகழ்ச்சி

    பல்வேறு அமைப்புகள் சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    திருப்பூர்:

    சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது நினைவுநாளை முன்னிட்டு காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் தலைவர் மாதவன் தலைமையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் பழனியப்பன், ஆலோசகர் ஜெயக்குமார், அமைப்பாளர் பத்மா சேர்மன், மற்றும் காமராஜர் மக்கள் மன்றம் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் சிவசேனா கட்சி சார்பில் கட்டபொம்மன் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    இதில் சிவசேனா இளைஞரணி மாநில தலைவர் அட்சயா திருமுருக தினேஷ், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ், இளைஞரணி திருப்பூர் மாவட்ட தலைவர் ராதா.சுதீஷ், இளைஞரணி செயலாளர் மணிகண்டன்,திருப்பூர் மாநகர, மாவட்ட சிவசேனா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதேப்போல் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
    Next Story
    ×