என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் நியூ செஞ்சுரி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்து விஜயன். இவரது மகள் பியூலா (வயது28). நேற்று இரவு இவர் பஸ் ஏறுவதற்காக பெருமாள் புரம் ரோட்டில் நடந்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பியூலா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பியூலா பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசியை சேர்ந்தவர் சித்திக் இஸ்மாயில். இவரது மனைவி செய்யது ஷர்மிளா பாத்திமா. நேற்று இவர் உறவினரை பார்ப்பதற்காக மகாராஜ நகர் சர்ச் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த 2 நகைப்பறிப்பு சம்பவத்திலும் ஒரே நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் மற்றும் மகாராஜநகர் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை பார்த்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்