என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்16 Oct 2021 10:17 AM GMT (Updated: 16 Oct 2021 10:17 AM GMT)
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சண்முகலிங்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகலிங்கம் (வயது 45). இவரது மனைவி கற்பகவள்ளி (36). இந்தநிலையில் சண்முகலிங்கத்திற்கு இடது கன்னத்தில் கேன்சர் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கற்பகவள்ளி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். நேற்று முன்தினம், இரவு வேலைக்குச் சென்ற, கற்பகவள்ளி நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது சண்முகலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதையடுத்து அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகலிங்கம் உயிரிழந்தார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி கற்பகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X