search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமங்கலம் அருகே பஸ் மோதி டேங்கர் லாரி டிரைவர் பலி

    திருமங்கலம் அருகே பஸ் மோதி டேங்கர் லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை ஆவியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது50), டேங்கர் லாரி டிரைவர். இவர் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்தில் பெட்ரோல் பிடிப்பதற்காக வந்திருந்தார்.

    அப்போது டீ குடிப்பதற்காக உசிலம்பட்டி அருகே உள்ள மேலபெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியுடன் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    கப்பலூர் 4 வழிச்சாலை பகுதிக்கு வந்தபோது சிவகாசியில் இருந்து மதுரை வந்த தனியார் பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×