என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பணகுடியில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
நெல்லை:
பணகுடியில் உள்ள நெல்லையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் என்ற துரை (வயது 37). இவர் நேற்று பணகுடியில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றம் நர்சுகளை அவதூறாக பேசினார். இது தொடர்பாக அங்கிருந்த டாக்டர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு பணகுடி போலீஸ்காரர் ரமேஷ் மற்றும் கிங்ஸ் ஆகிய 2 பேர் சென்றனர். அங்கு ரகளை செய்த துரையை வெளியே செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் துரை போலீஸ்காரர் ரமேசையும் அவதூறாக பேசி கழுத்தை நெரித்து தாக்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து 2 போலீஸ்காரர்களும் சுற்றி வளைத்து துரையை பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தியிடம் புகார் செய்தனர். இதன்பேரில் அரசு டாக்டர், போலீஸ்காரர் ஆகியோரை பணிசெய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரையை கைது செய்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்