என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆனைமலையில் குடிபோதையில் திட்டிய வாலிபருக்கு அரிவாள் வெட்டு
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை சேத்துமடையைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரது நண்பர் அமர் (20). சம்பவத்தன்று இவர்கள் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அமர் ஜேசுதாசின் செல்போனை எடுத்து அதே பகுதியை சேர்ந்த மதன்குமார்(30) என்பவருக்கு போன் செய்து தகாதவார்த்தைகளால் திட்டி போனை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் தனது நண்பர் உதயகுமார் என்பவரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார்.
அங்கு ஜேசுதாஸ் மற்றும் அமரிடம் எதற்காக போன் செய்து தகாத வார்த்தையால் திட்டினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதன் குமார் மற்றும் உதயகுமார் அங்கு இருந்த அரிவாளை எடுத்து ஜேசுதாசை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த ஜேசுதாசை அங்கிருந்தவர்கள் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஜேசுதாஸ் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். இதைப்போன்று மதன் குமார், ஜேசுதாஸ் மற்றும் அமர் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்