என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
51.60 சதவீதம் வளர்ச்சி - சரிவில் இருந்து மீண்ட ஆயத்த ஆடை வர்த்தகம்
Byமாலை மலர்16 Oct 2021 9:29 AM GMT (Updated: 16 Oct 2021 9:29 AM GMT)
கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது சரிவில் இருந்து மீண்டெழுந்து விட்டது.
திருப்பூர்:
நடப்பு நிதியாண்டின் (2021 - 22) முதல் அரையாண்டில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 51.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரூ. 35 ஆயிரத்து 767 கோடிக்கு ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது. இந்த வர்த்தகம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.54,225 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது சரிவில் இருந்து மீண்டெழுந்து விட்டது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 51.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது மகிழ்ச்சி அளிக்கிறது.
சர்வதேச அளவில் பஞ்சு, சாயம் உட்பட ஆடை தயாரிப்பு மூலப்பொருட்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தகர் களிடம் ஆயத்த ஆடைகளுக்கு கூடுதல் விலை நிர்ணயித்து பெற வேண்டியது அவசியமாக உள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X