search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலினுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் பாராட்டு

    மக்கள் நலனிலும், மாநில வளர்ச்சியிலும் சீரிய அக்கறை காட்டி, சிறப்பான திட்டங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நலனிலும், மாநில வளர்ச்சியிலும் சீரிய அக்கறை காட்டி, சிறப்பான திட்டங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். உயிர் பலியான துளசிதாஸ் குடும்பத்துக்கு நிதி உதவியும், வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவித்ததோடு டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு இருப்பது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தி உள்ளது.

    இதனை பாராட்டுகின்றோம். டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரப்படுத்தும் சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். தீபாவளி போனஸ் 40 சதவீதம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×