என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Byமாலை மலர்16 Oct 2021 4:34 AM GMT (Updated: 16 Oct 2021 4:34 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
நெல்லை:
மன்னார்வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த 14-ந் தேதி முதல் இன்று வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தருவைகுளம், வேம்பார், தாளமுத்துநகர், திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார்வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த 14-ந் தேதி முதல் இன்று வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தருவைகுளம், வேம்பார், தாளமுத்துநகர், திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X