search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகுகள்
    X
    படகுகள்

    நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    நெல்லை:

    மன்னார்வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த 14-ந் தேதி முதல் இன்று வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தருவைகுளம், வேம்பார், தாளமுத்துநகர், திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×