search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    நிலக்கோட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

    நிலக்கோட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி மனைவி அபிராமி (வயது 22). இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி (57) என்பவர் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அபிராமி தனது தோட்டத்துக்கு சென்று விட்டு வரப்பு வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அங்கு வந்த வேலுச்சாமி, அவரது மனைவி விஜயலட்சுமி, மகள்கள் மாலதி, சுகந்திரியா, நித்தியா ஆகிய 5 பேரும் சேர்ந்து அபிராமியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த அபிராமி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். இது குறித்து அபிராமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×